பிரான்சில் சுதந்திர தாகம் பேரணி

Posted PM 2:43 by S R E E in லேபிள்கள்: ,

சிறிலங்கா அரசின் வதைமுகாம்களுக்குள் வாழும் உறவுகளை விடுதலைசெய்யக்கோரி மாபெரும் பேரணி சனிக்கிழமையன்று (17.10.2009) நடைபெறவுள்ளது.

உலக நாடுகளிடம் கையேந்தி பெரும் அழிவாயுதங்கள்கொண்டு தமிழினத்தின் பல்லாயிரம் உயிர்களை பலியெடுத்து இரத்தக்கறைகளில் தோய்ந்தபடி சிங்களப்பேரினவாதம் தொடர்ச்சியான மனிதவுரிமை மீறல்களை செய்து வருகிறது.

பட்டிணி ஓலங்களும், சாவுகளும் மலிந்துபோய், குரல்வளை நெரிக்கப்பட்ட மனிதர்களாய், அடக்குமுறையின் உச்சமாய் பெரும் துன்பத்துக்குள் வாழும் மக்களை விடுதலைசெய்யக்கோரி பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் சுதந்திர தாகம் பேரணியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்தப்பேரணியை எழுச்சியாக்கி எமது மக்களின் வாழ்விற்கு உதவிட பிரான்சில்வாழும் அனைத்து உறவுகளையும் தவறாது இந்தப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களே உங்களது மக்களை காப்பற்றப் புறப்படப் போகின்றீர்களா? அல்லது சுகபோக வாழ்க்கையில் தீபாவளியை கொண்டாடப் போகின்றீர்களா? சிந்தியுங்கள்.

இடம்; - Port-Royal (RER-B) இல் இருந்து
Place Valhubert வரை

காலம் - 17.10.2009 சனிக்கிழமை
நேரம் - 14.00மணி


0 comment(s) to... “பிரான்சில் சுதந்திர தாகம் பேரணி”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails