எமது கோரிக்கைகளுக்கு உரிய வகையில் இலங்கை பதிலளிக்கவில்லை – நவனீதம்பிள்ளை

Posted PM 2:42 by S R E E in லேபிள்கள்: ,

தமது கோரிக்கைகளுக்கு உரிய முறையில் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வாறன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதனை செயலாளர் நாயகமும், தாமும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்திய தேசிய மட்ட விசாரணைகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகள் நடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம் இலங்கைக்கு விஜயம் செய்வதனை அந்நாட்டு அரசாங்கம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்வீர்களா? என ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



0 comment(s) to... “எமது கோரிக்கைகளுக்கு உரிய வகையில் இலங்கை பதிலளிக்கவில்லை – நவனீதம்பிள்ளை”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails