நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலங்கை சென்றுள்ள இந்திய (தமிழக) குழு இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சந்தித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவர்களிடம் கீழ் வரும் கோரிக்கையை விடுக்கின்றது.
-

ன்புக்குரிய தமிழக அரசியல் பிரதிநிதிகளுக்கு

உங்களுடைய வருகை எங்கள் மக்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இன்றைக்கு தமிழ் மக்கள் அவதியான காலத்திற்குள் சிக்குப்பட்டுக் கிடக்கிறார்கள். மிக பிரமாண்டமான முட்கம்பி வேலிகளுக்குள் அவர்கள் பெரிய ஏக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளை இங்கே உங்களால் பார்க்க முடிகிறது. உங்களிடத்தில் எங்களால் எல்லாவற்றையும் இப்படியான முற்றுகைத் தருணத்தில் பேசிவிட முடியாது. அப்படி ஒரு சூழல் எங்களுக்கு இல்லை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களது பயணம் எப்படியானது எதற்காக நிகழுகிறது என்பதைக்கூட அதன் சாட்சியத்திற்கு வலுத்தருகிற விதமாக அல்லது எங்கள் பாடுகளை சொல்லுகிற விதமாக கூட இந்த வாழ்வுச் சூழலும் இங்கு நடந்த உரையாடல் சூழலும் இல்லை என்பதுதான் எங்கள் துக்கமாக இருக்கிறது.

மிகவும் கொடுமையான யுத்தம் நடந்த பிறகு அதன் விளைவாக பெரியதாய் விளைந்து போய்க்கிடக்கிறது இன்றைய எமது மக்களின் துயரங்கள். எங்கள் மாணவர்கள் கால்களை, கைகளை, மனங்களை இழந்து யுத்தின் விளைபொருட்களாக இங்கு வந்திருக்கின்றார்கள். சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வியையும் மாணவத்தன்மையையும் முழுமையாக இழந்து கற்க முடியாத நிலையிலேயே வந்திருக்கிறார்கள். இதை யாரால், எப்படி ஈடு செய்ய முடியும்? இந்த விளைவுகளுக்கு எல்லோருமே காரணமாக இருந்தவர்கள். யுத்தம் முடிவடைந்தது உயிரழிவை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. போதும் என்ற வெறுப்பையும் உலகத்தால் கைவிடப்பட்ட கையறு நிலையையும் உணர்த்தியிருக்கிறது.

நடந்து முடிந்தவைகள் தொடர்பான விசாரணைகளைப் பற்றியும் அதற்கு காரணானவர்கள் மீதான குறை கூறுதலைப் பற்றியும் நாம் எதைப் பேசியும் பிரயோசனமில்லை என்றே நினைக்கிறோம். அது ஒட்டு மொத்த உலகம் அதன் ஒழுங்கு, அதிகாரம் பற்றிய சாமானிய சனங்களின் கேள்வியாக இருக்கும். இன்று இங்கு நீங்கள் பார்க்கப்போகிறவைகள் பற்றி நீங்கள் கலைஞர் அவர்களுக்கு என்ன அறிக்கை கொடுக்கப்போகிறீர்கள்? அவர் பிரதமருக்கு அதை அனுப்பி வைக்கும்பொழுது என்ன நடக்கப்போகிறது? என்ற கேள்விகள் அல்லது எதிர்பார்ப்பு எமக்கு இருக்கிறது. உண்மையில் எங்கள் மக்களுக்கு விமோசனம் தருகிற விடயங்கள் நடக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.

எமது மக்கள் யுத்த களத்தில் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்து விட்டு வந்து தற்போது முட்கம்பிச் சிறைக்குள் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத துயரத்தை அனுபவிக்கிறார்கள். எமது மக்களை உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தி சிதைந்த தேசத்தை அவிருத்தி செய்து இழந்த வாழ்வை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள். நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழவுரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்ற இரண்டு கோரிக்கைகளையும்தான் எமது மாணவர்கள் சார்பாக மக்களுக்காக உங்கள் முன் தருகிறோம்.

தமிழ் மக்களாக அவர்களின் மாணவர்களாக இருந்து கொண்டு இந்தக் கோரிக்கைகளையே உங்களிடம் முன் வைக்கிறோம். தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதாவது 30 வருடத்திற்கு மேலாக எல்லோருடனும் பேசிவருகிறோம். ஏமாற்றங்களும் படுதுயரங்களும்தான் எமக்கு கிடைத்திருக்கின்றன. தமிழகமும் இந்தியாவும் எமது மக்கள் விடயத்தில் வகித்த பாத்திரங்கள் முக்கியமானவை. அது எங்கள் மக்களின் 30 வருட கால போராட்டத்தில் எல்லாவிதமான மாற்றங்களுடனும் விளைவுகளுடனும் சம்பந்தப்பட்டவை.

இனி, அதாவது இன்றை இத்தகைய விளைவுகளின்பொழுது தமிழகமும் இந்தியாவும் இன்றைய ஈழ தமிழ் மக்கள் விடயத்தில் எப்படி செயற்படப்போகின்றது? எமது மக்களின் வாழ்வை மீளவும் அத்துடன் புதிதாகவும் கட்டியெழுப்பி இயல்பு வாழ்வொன்றுக்கு திரும்ப உங்களது நடவடிக்கை அல்லது உதவி எங்களுக்கு உடனடியாகவே தேவைப்படுகிறது.

நீங்கள் எங்கள் மக்களை போய்ப் பாருங்கள். எமது மாணவர்களின் பெற்றோர்களை சகோதரர்களை உறவினர்களை பாருங்கள். உண்மையில் எமது மக்களது நிலமை என்ன? என்பதையும் அவர்களுக்கு என்ன தேவை என்பதையும்? நேரடியாக கண்டு கொள்ளுங்கள். அவர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்? எங்கள் மக்களை இப்படி ஒரு நிலமையிலிருந்து எப்படி காப்பற்றாலம்? அதற்கு உங்கள் பங்கு என்ன வகையில் தேவைப்படுகிறது என்பதை உடனேயே செய்யுங்கள்.

வன்னி அகதிகள் எதிர்பார்த்திருக்கிற மாதிரி உங்களது சந்திப்பு மாற்றத்தை தந்து எமது மக்களை அமைதியான வாழ்வுக்கு திரும்ப உதவ வேண்டும் என்பதை மிகவும் அவசியமாக வலியுறுத்துகிறோம். எமது மக்களின் மாணவர்களாக இந்த கொடும் யுத்தம் நடந்த பூமியில் எங்கள் உள்ளார்ந்த அபிலாசைகளை அல்லது கோரிக்கைகளை உங்களின் வாயிலாக முழுத் தமிழக உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நன்றி.
இவ்வண்ணம்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

.

கடந்த 50 நாட்காளாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் " அடங்காப்பற்று" போராட்டத்தில், 26.05.09 செவ்வாய்க்கிழமை பி.பகல் 14.00 மணிமுதல் 18.00 மணிவரை பிரான்ஸ் UNESCO முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களை கொன்றொழித்து, பல்லாயிரக்கணக்கானவர்களை அங்கவீனர்களாக்கிய


சிறிலங்கா இனவாத அரசினை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தக்கோரியும்,


தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசையான தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும்,


தமிழ்மக்களின் காப்பரணாக விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது விதித்திருக்கும் தடையை நீக்குமாறு கோரியும்,


மனிதாபிபமான பணியினை தமிழர் தாயகப்பகுதிகளில் சர்வதேச மனிதநேய அமைப்புக்கள் சுதந்திரமாகவும், உடனடியாகவும், பணிபுரிய அனுமதியளிக்க வேண்டும் என்று சிறீலங்கா அரசை சர்வதேச நாடுகள் வற்புறுத்த வேண்டும் எனக்கோரியும்


ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

அனைத்து தமிழ் மக்களையும் காலத்தின் தேவையை உணர்ந்து ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்


Lieu: UNESCO,

Place Fontenoy (75007 Paris)

: Metro. Segur (Ligne 10)

தமிழர் ஒருங்கிணைப்பு குழு
Tel: 06 11 72 59 78


---

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துள்ள இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது.

போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்த காலகட்டத்தில் அரசியலுக்குள் பிரவேசித்தவர் அவர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய அவர் மக்கள்மய அரசியலில் அதீத நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார்.

காலச் சூழல் அதற்கு இடம்தராத நிலையிலும் கூட கடைசிவரை நிதானம் தவறாது மக்களுக்காகச் சேவை செய்தார்.

தமிழ்த் தேசியத்தின் விரோதிகள் அவரது பாதையைத் தடம்புரளச் செய்ய பல தடவைகளில் முயற்சி செய்தபோதிலும் கூட அது இறுதிவரை கைகூடவில்லை.

ஆசை வார்த்தைகள் கூறி அவரைத் தமது வலையில் சிக்க வைக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவற்றுக்கு வளைந்து கொடுக்காத அவர் இறக்கும் வரை தான் கொண்ட கொள்கையில் வழுவாது இருந்தார்.

இறுதி மூச்சு வரை இலட்சியப் பற்றுடன் வாழ்ந்து மறைந்த அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது கவலையைக் காணிக்கையாக்குகிறோம். ஈழத் தமிழ் மக்கள் மனதில் அவரின் நாமம் நீங்காது நிலைத்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்: செல்வராசா பத்மநாதன்

[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2009, 01:56.16 PM GMT +05:30 ]

தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா பத்மநாதன் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.

24 வைகாசி, 2009

தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்
தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.

கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.

அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.

தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.

போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெறியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.

தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

செல்வராசா பத்மநாதன்
அனைத்துலக வெளியுறவுச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்

நன்றி : தமிழ்விண்


சிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர்
48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை
வரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை
பத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009
(திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை

நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை
ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டத்தை
தொடங்க இருக்கிறார்.

அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு
ஆதரவு தெரிவிக்கவும்.

சர்வதேச சமூகத்தின்
கவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு
வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்

-

இடம் ஹாங் லிம் பார்க் hong lim park (speakers corner).

கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்

தொடர்புக்கு
-
தமிழ் மறையான் 92702429,
-
சத்யா-83984444

சிங்கபூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும் ,தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும்.

நிர்வாக குழு
-
உலகத் தமிழ் மக்கள் அரங்கம்


நிகழ்வின் படங்கள்

http://picasaweb.google.co.in/Earnestbrothers/tJYJTC#


ஈழத் தமிழர்களைக் காப்போம்
மதுரை, திருச்சியில் பேரணி- பொதுக்கூட்டம்
சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் தீர்மானம்

சென்னை, மே 23- ஈழத் தமிழர்களைக் காப் போம் என்னும் பெயரில் சென்னையில் பொதுக் கூட்டமும், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற உள்ளன.

ஈழத் தமிழர் வாழ் வுரிமை மீட்பு இயக்கத் தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று (23.5.2009) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி அவர்களின் தலை மையில் நடைபெற்றது.


கூட்டத்தில், தொல். திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப. வீர பாண்டியன், பெருங் கவிக்கோ வா.மு. சேது ராமன், பொன். குமார், கவிஞர் மு. மேத்தா ஆகி யோர் கலந்துகொண் டனர்.
கீழ்க்கண்ட தீர்மா னம் நிறைவேற்றப்பட் டது.
1. ஈழத் தமிழர் களைக் காப்போம்! எனும் பொருளில் கீழ்க் கண்ட ஊர்களில் பேர ணியும், பொதுக்கூட்ட மும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பது என்று முடிவு செய்யப் படுகிறது.
1.6.2009 மாலை சென்னை - சைதாப்பேட்டை தேரடி தெருவில் (பொதுக்கூட்டம் மட்டும்).
7.6.2009 மாலை திருச்சி - பேரணியும், பொதுக்கூட்ட மும்.
13.6.2009 மாலை மதுரை - பேரணியும், பொதுக் கூட்டமும்.
பேரணி, பொதுக் கூட்டத்தின் நோக்கங் கள் வருமாறு:-
1. ஈழ மண்ணில் உண வின்றியும், மருந்தின்றி யும் உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்குப் பன் னாட்டுப் பார்வையா ளர்களின் முன்னிலையில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உதவிகள் செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
2. சொந்தத் தேசத்தில் அகதிகளாக வாழும் அம்மக்களை, அவரவர் பகுதிகளில் மீள் குடி யேற்றம் செய்திட உலக நாடுகள் உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3. தமிழின அழிப் பையே நோக்கமாகக் கொண்டு, தமிழீழ மக் களை அழித்தொழித்த (ழுநடிஉனைந) ராஜபக் சேயைப் போர்க் குற்ற வாளியாக உலக நீதிமன் றத்தில் நிறுத்தவேண்டும்.
4. தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பி னர் குழு ஒன்று, உட னடியாக இலங்கை சென்று உண்மைகளைக் கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண் டும்.
5. இலங்கைக்கான இந்தியத் தூதுவராகத் தமிழர் ஒருவரே உடன டியாக நியமிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தீர் மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Posts with Thumbnails