இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை: ராஜபக்சே -பான் கீ மூன் கூட்டறிக்கை

Posted PM 11:03 by S R E E in லேபிள்கள்: , ,

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு சென்றார்.

இலங்கையில் வவுனியாவில் போர் நடந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும், இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் பெரும் எண்ணிக்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மானிக் பாம் அகதிகள் முகாமையும் அவர் பார்வையிட்டார்.

இதன் பின்னர், அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பான் கீ மூன் தீவிர ஆலோசனையும் நடத்தினார். இதன் பிறகு இரு தலைவர்களின் சார்பாகவும் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரது குறைகளை தீர்க்கவும், அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றவும், இலங்கையின் நீண்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக அரசியல் ரீதியாக தீர்வு காண வாய்ப்புகளை உருவாக்கவும் இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடக்காத வடக்கு இலங்கை பகுதியில் ஜனநாயக ரீதியான அமைப்பினை ஏற்படுத்தவும், அரசியல் ரீதியாக அங்கு தேர்தலை நடத்தி முடிக்கவும் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூனும், ராஜபக்சேவும் அந்த கூட்டறிக்கையில் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

வடக்கு பகுதி மக்களுக்கு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு உறுதியாக இருப்பதாகவும் அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



0 comment(s) to... “இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை: ராஜபக்சே -பான் கீ மூன் கூட்டறிக்கை”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails