இலங்கையில் முள்கம்பி முகாம்களில் வதைப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை, அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும்வரை போராட்டம் தொடரும் - புதிய தமிழகம்

Posted PM 9:23 by S R E E in லேபிள்கள்: , ,
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேசும்போது, உலக நாடுகள் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தும். இந்திய அரசு மவுனம் சாதிக்கிறது. தமிழகத்தின் தலைநகரில் அமர்ந்துகொண்டு முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மிருகக்காட்சி சாலை அளவிற்கு ஒப்பிட்டு பேசக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு தெம்பு வந்துவிட்டது.


எனவே முள்கம்பி வேலிக்குள், அடைப்பட்டுக் கிடக்கும் மூன்று லட்சம் ஈழத் தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பவேண்டும். தமிழக மீனவர்களின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உறுதியளிக்கவேண்டும். இக்கோரிக்கை நிறைவேறும்வரை புதிய தமிழகம், இந்திய தவ்ஹித் ஜமா-அத், யாதவ மஹாசபை மற்றும் பன்னாட்;டு தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தொடர் போராட்டம் நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டது என்றார்.

-


0 comment(s) to... “இலங்கையில் முள்கம்பி முகாம்களில் வதைப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை, அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும்வரை போராட்டம் தொடரும் - புதிய தமிழகம்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails