இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம் - சத்யராஜ், செல்வமணி, கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
Posted 8:23 PM by S R E E inஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வதை நிறுத்தக்கோரியும் செங்கற்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக இன்றும் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். |
செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மொத்தம் பதினான்கு மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த மாணவர்கள் தண்ணீர்கூட அருந்தாமல் இருப்பதால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து இவர்களை செங்கற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களை இன்று நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, சந்தனக்காடு தொடர் இயக்குநர் வ.கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். மாணவர்களின் உண்ணாநிலையை முடித்துக்கொண்டு வேறு வகையில் போராடும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை மாணவர்கள் நிராரித்தனர். இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தி இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்வரை போராட்டம் நடக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அடுக்கடுக்காக உதவிகளை இந்திய அரசு இலங்கைக்குச் செய்தாலும் இந்தியப் பிரதமர் இதய அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும் பூரண குணமடைய தமிழர்கள்தான் பிரார்த்தனை செய்கின்றனர். news@tamilwin.com |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக